அஜீத் படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை மரியாதையாக கருதுவேன். தனுஷ்
தனுஷ் தயாரித்த நானும் ரெளடிதான்’ திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், டுவிட்டரில் ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாக பதிலளித்தார். அப்போது அஜீத், விஜய், சூர்யா மற்றும் விக்ரம் குறித்து தனது கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்: தமிழ்த் திரையுலகில் எனக்குப் பிடித்தமான டான்ஸர் விஜய். அவர் படத்தில் சிறப்புத் தேற்றத்தில் நடிக்கும்படி கேட்டால் உடனே ஓகே சொல்லிவிடுவேன்.
அஜித்: கம்பீரமானவர். அவர் படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை மரியாதையாகக் கருதுவேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மிக எளிமையானவரும் கூட.
சூர்யா: கடின உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
விக்ரம்: இவரை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அவரின் கடினமான உழைப்பு என்னை இன்றும் வியக்கவைக்கும். ஆனால் என்னை யார் ரசிகன் என்று கேட்டால், இன்றும் என்றும் நான் ரஜினி ரசிகன் தான்.
மேலும் வில்லன் கதாபாத்திரங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்சனின் வில்லத்தனமான நடிப்பை ரசிப்பதாகவும் கூறிய தனுஷ் விரைவில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.