மலையாள திரையுலகில் கால்பதிக்கும் தனுஷ்
கோலிவுட் திரையுலகில் தனுஷ் தொடாத உயரம் இல்லை. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என கிட்டத்தட்ட அனைத்து துறையிலும் கால்பதித்துவிட்டார். மேலும் தமிழ் படமான ‘ஆடுகளம்’ மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், விசாரணை’, காக்கா முட்டை படத்திற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதையும் பெற்றுவிட்டார்
மேலும் இந்தியில் இரண்டு படங்கள் நடித்துள்ள தனுஷ் விரைவில் ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மலையாள திரையுலகிலும் அவர் கால்பதித்துள்ளார். டோமினிக் அருண் இயக்கும் ஒரு படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கின்றார். டோவினோ தாமஸ் மற்றும் நேஹா ஐயர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.