மதுரை தம்பதியர் வழக்கு. நேரில் ஆஜரான நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கில் அங்க அடையாளங்களை சரிபார்க்க நடிகர் தனுஷ் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இட்டிருந்ததை தொடர்ந்து தனுஷ் இன்று நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கின் விசாரணையில் நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை மருத்துவர் சரிபார்த்து இன்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தனுஷ் இன்று மதுரை நீதிமன்றத்திற்கு வருவதை முன்னிட்டி நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது
//www.youtube.com/watch?v=EEslmQVZ-c0&feature=youtu.be
Leave a Reply
You must be logged in to post a comment.