தனுஷின் அடுத்த படத்தில் 3 நாயகிகள்.
தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் அவர் தற்போது ராஜ்கிரண் நடித்து வரும் ‘பவர்பாண்டி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் செளந்தர்யா ரஜினி இயக்கவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் தனுஷுக்கு மூன்று நாயகிகள் என்றும் அவர்களில் இருவர் காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் என்றும் மூன்றாவது நாயகி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் படப்ப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.