கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் லிங்கா என்று அறிவிக்கப்பட்டு அந்த தலைப்பை பதிவு செய்ய இயக்குனர் சென்றபோதுதான் தெரிந்தது லிங்கா என்ற தலைப்பு ஏற்கனவே வேறொருவர் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அது வேறு யாருமில்லை. அந்த தலைப்பை பதிவு செய்தது தனுஷ்தா.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் பெயர் லிங்கா என்ற தலைப்பு என தெரிந்தவுடன் தனுஷே நேரடியாக ரஜினியிடம் சென்று அந்த தலைப்பை ரஜினிக்காக விட்டுக்கொடுப்பதாக கூறியிருக்கிறார். இதனால் ரஜினியும் கே.எஸ்.ரவிகுமாரும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
லிங்கா என்ற பெயர் தனுஷின் மகன் பெயர் என்பதால் அந்த பெயரில் தானே சொந்தமாக ஒரு ஆக்சன் திரைப்படம் எடுப்பதற்காக அந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், மாமனாருக்காக அதை விட்டுக்கொடுத்துவிட்டதாகவும் தனுஷ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.