ராஞ்சன்னா, ஷமிதாப் படங்களின் வெற்றியை அடுத்து தனுஷுக்கு அதிகமாக பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. தற்போது அவர் இரண்டு பாலிவுட் இயக்குனர்களிடம் கதையை கேட்டு கிட்டத்தட்ட அந்த படங்களை ஒப்புக்கொள்ளும் நிலையில் இருக்கின்றார்.
எனவே அடிக்கடி இனிமேல் மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நிலை இருப்பதால் மும்பையில் சொந்த வீடு வாங்க தனுஷ் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இதே காரணத்திற்காக மும்பையில் வீடு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை தனுஷ் பெரும் தொகை ஒன்று கொடுத்து வீடு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ், இந்தி என மாறி மாறி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தனுஷ், இனி மும்பை படப்பிடிப்பின்போது சொந்த வீட்டிலேயே தங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.