shadow

இன்று ஒரே நாளில் தனுஷ்-சூர்யா படங்களின் படப்பிடிப்பு தொடக்கம்

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் தனுஷ், சூர்யா ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் தங்களுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

தனுஷ் இன்று முதல் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும், சூர்யா இன்று முதல் செல்வராகவன் இயக்கும் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.