shadow

சோட்டாராஜன் நாடு கடத்தலா? பெரும் பரபரப்பு
chota-rajan
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ, மும்பை மற்றும் தில்லி நகர போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேற்று முன் தினம் இந்தோனேஷியா சென்றது.

இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் இந்த குழு முதலில் இந்திய தூதரக அதிகாரியை சந்தித்தனர் இந்த சந்திப்புக்கு பின்னர் நாளை சோட்டாராஜனை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளிலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்தோனேஷியாவில் இருந்து அதற்குள் சோட்டாராஜன் நாடு கடத்தப்படலாம் என்றும், அல்லது சோட்டாராஜனை கொல்ல முயற்சி நடக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தோனேஷியா சென்ற குழு பரபரப்பு அடைந்துள்ளது.

English Summary: Deportation of Chotta Rajan: Joint team reaches Indonesia

 .

Leave a Reply