ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது எப்படி? மோடியிடம் ஐடியா கேட்ட நேபாள பிரதமர்
இந்தியாவில் கடந்த வாரம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பண முதலைகளும், கள்ள நோட்டு கயவர்களும் அதிர்ச்சி அடைந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை உலக தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதே அதிரடி நடவடிக்கையை தனது நாட்டிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ள நேபாள பிரதமர் மாற்று ரூபாய் வழங்குவது குறித்த ஆலோசனையை மோடியிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் நேபாளத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்திய ரூபாய்களை மாற்ற வசதி செய்து தரும்படி அவர் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேபாளம் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைகள் விரைவில் களையப்படும் என பிரசண்டாவிடம் மோடி உறுதி அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.