ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணி த்ரில் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் முடிவடைய உள்ள நிலையில் நேற்றைய 50வது போட்டியில் டெல்லி அணியும் குஜராத் அணியும் மோதின
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 195 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பின்ச் 69 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எஸ்.எஸ்.ஐயர் மிக அபாரமாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணிக்கு கூடுதலாக இரண்டு புள்ளிகள் கிடைத்தாலும் ஏற்கனவே இந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.