நேற்று நடந்த ஐ,.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் அபார ஆட்டத்தால் டெல்லி அணி நிலைகுலைந்து படுதோல்வி அடைந்தது.
நேற்று அபுதாபியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார் சென்னை அணி கேப்டன் தோனி. சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 56 ரன்களும்,கேப்டன் தோனி 32 ரன்களும், ஸ்மித்29 ரன்களும், எடுத்தனர்.
பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஓவர்களில் அடுத்தடுத்து டெல்லி அணியினர்களின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து அணியை நெருக்கடிக்கு தள்ளினர். தினேஷ் கார்த்திக் 21 ரன்களும், நீஷாம் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி 15.4 ஓவர்களில் 84 ரன்களுக்கு டெல்லி தனது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.