ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் நேற்றைய த்ரில் ஆட்டத்தில் கடைசி பந்தில் டெல்லி அணி ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. வார்னர் 73 ரன்கள் அடித்ததார்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. டெல்லி அணியின் கே.கே.நாயர் இரண்டு பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்ததோடு ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.