மார்ச் 7ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் மார்ச் 7-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் ஒரு மாதக் காலத்துக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லி முழுவதும் இயல்பு நிலை திரும்பவே இந்த விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும் பொதுத் தேர்வு தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் சிபிஎஸ்இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply