shadow

டெல்லி தொழிலதிபர் கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் பணத்திற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ஒரே மணி நேரத்தில் அவரை எந்தவித ஆபத்தும் இன்றி மீட்டனர். இதனால் காவல்துறையினர்களுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடத்தப்பட்ட தொழிலதிபரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது கடத்தல்காரன்களில் ஒருவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும், அந்த கடத்தல்காரன் தற்போது குண்டு காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவனிடம் விசாரணை நடத்திய பின்னரே இந்த கடத்தல் குறித்த முழு விபரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது

இன்னொரு கடத்தல்காரன் தப்பிவிட்டதாகவும் அவனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply