சென்னை விசாரணை முடிந்தது: இன்று மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்படும் தினகரன்
இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் தேர்தல் அதிகாரிகளுக்கு புரோக்கர் சுகேஷ் மூலம் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சமீபத்தில் தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி போலீசார் தினகரனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக சென்னைக்கு அழைத்து வந்து தினகரனின் தோழி உள்பட பலரிடம் விசாரணை செய்து முடித்துவிட்ட நிலையில் இன்று மீண்டும் தினகரனை டெல்லிக்கு போலீசார் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இன்று மாலை 7.40 மணியளவில் சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் தினகரன் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
டெல்லிக்கு சென்ற பின்னர், வரும் திங்கட்கிழமை தினகரனின் நீதிமன்ற காவலை மேலும் நீடிக்க டெல்லி காவல்துறையினர் மனு அளிக்கவுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அதே திங்கட்கிழமைதான் தினகரனின் ஜாமின் மனுவும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.