சிஏஏவுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது கெமிக்கல் ஸ்ப்ரே: டாக்டர் கூறும் அதிர்ச்சி தகவல்

குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போராட்டத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றில் போலீசார் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கூட்டத்தை கலைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஸ்பிரேயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த போது போலீசார் அடித்தது பெப்பர் ஸ்ப்ரே அல்ல என்றும் அது ஒரு கெமிக்கல் ஸ்பிரே என்றும் அது மனிதர்களின் உடலில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தக் கூடியது என்றும் டாக்டர்கள் கூறியததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை பயத்தை இவ்வாறு கெமிக்கல் ஸ்ப்ரேயை போலீசார் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியிலும் டாக்டர்கள் மத்தியிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிஏஏ, போராட்டம், பெப்பர் ஸ்ப்ரே, கெமிக்கல் ஸ்ப்ரே,

Leave a Reply