shadow

elephantடெல்லி சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் துன்பறுத்தப்பட்டதாக கூறப்பட்ட 67 யானைகளை விலங்குகள் நல அமைப்பு அதிரடியாக மீட்டு, அந்த யானைகளுக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

டெல்லி சர்க்கஸ் கூடாரம் ஒன்றில் யானைகளுக்கு சரியாக உணவு கொடுக்காமல் துன்புறுத்தி வருவதாகவும், நோய் தாக்குதலால் கஷ்டப்பட்டு கொண்டிருந்த யானைகள் சிலவற்றுக்கு தகுந்த சிகிச்சை கொடுக்காமல் இருந்ததாகவும் வந்த புகாரை அடுத்து நேற்று விலங்குகள் நல காப்பக அதிகாரிகள் காவல்துறையினர் உதவியோடு அதிரடியாக அந்த சர்க்கஸ் கூடாரத்தை ரெய்டு செய்தனர். இந்த ரெய்டில் 67 யானைகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றில் ஒருசில யானைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சுஜி என்ற யானைக்குட்டி மிகவும் ஆபத்தானநிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் சர்க்கஸ் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply