shadow

டெல்லி ஐஐடி பி.எச்.டி மாணவி தூக்கி தொங்கி தற்கொலை!

டெல்லி ஐஐடியில் பி.எச்.டி இறுதியாண்டு படித்து வந்த 29 வயது மாணவி ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரது கணவர் மற்றும் பெற்றோர்களுக்கு போலிசார் தகவல் அனுப்பியுள்ளனர்.

டெல்லி ஐஐடியில் பி.எச்.டி இறுதியாண்டு பயின்று வந்த 29 வயது மணிலா தேவக் என்பவர் ஐஐடி வளாகத்தில் உள்ள நாலந்தா விடுதியில் தான் தங்கியிருந்த அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து இரவு 8 மணியளவில் விடுதி காப்பாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த அறையை ஆய்வு செய்து, தேவக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிலாவின் தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர் எழுதிய கடிதம் எதுவும் இல்லை என்றும் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவராத நிலையில், அவர் படிப்பினால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போபாலில் வசிக்கும் மணிலாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply