shadow

பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு, டில்லி ஐகோர்ட் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவfகள் ‘டர்புலன்ட் இயர்ஸ்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்பு குறித்த அத்தியாயத்தின் சில பகுதிகள், இந்து மதத்தினரை புண்படுத்தும்படி இருப்பதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர், யு.சி.பாண்டே மற்றும் சில வழக்கறிஞர்கள் இணைந்து, டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்; இந்த மனுவை டெல்லி கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரதிபா எம்.சிங், மனுதாரர்களின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, பிரணாப் முகர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply