டெல்லியில் மருத்துவருக்கே தொற்றிய கொரோனா: சிகிச்சை பெற்றவர்கள் தனிமைப்படுத்தியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 12 பேர் இந்த வைரசால் இதுவரை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மட்டுமின்றி அவரிடம் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply