கடைசி வாய்ப்பையும் கோட்டைவிட்ட மும்பை: தொடரில் இருந்து வெளியேறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 55வது போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருந்த நிலையில் அந்த அணி டெல்லி அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் கடைசி வாய்பை கோட்டைவிட்டது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் குவித்தது. ஆர்.ஆர்.பேண்ட் 64 ரன்களும், விஜய்சங்கர் 44 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் வெற்றி பெற 175 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் லீவிஸ் 48 ரன்களும், கட்டிங் 37 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியின் அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.