shadow

vijaysamathasurya2214_mவிஜய்யுடன் கத்தி, மற்றும் சூர்யாவுடன் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, கத்தி படத்திற்கு கொடுக்கும் ஒத்துழைப்பை அஞ்சான் படத்திற்கு கொடுப்பதில்லை என்று அஞ்சான் படக்குழுவினர்களிடம் இருந்து புகார் எழும்பியுள்ளது.

அஞ்சான் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டமிட்டபடி டீசரை வெளியிட இயலவில்லை. இதற்கு காரணம் சமந்தாதான் என்று கூறப்படுகிறது. அஞ்சான் பட டீஸரில் சூர்யா-சமந்தாவின் டூயட் காட்சிகளை இணைக்க இயக்குனர் லிங்குசாமி முடிவு செய்திருந்தார். ஆனால் சமந்தாவின் கால்ஷீட் சொதப்பலால் கோவாவில் கடந்த மாதமே நடக்கவிருந்த டூயட் பாடலின் படப்பிடிப்பு சென்றவாரம்தான் நடந்தது.

இதனால்தான் டூயட் காட்சிகளை டீஸரில் இணைக்க முடியவில்லை என்றும், இந்த டீஸர் வெளியீட்டை இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளதாகவும் இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். விஜய் படத்திற்கு அளிக்கும் ஒத்துழைப்பை தங்கள் படத்திற்கும் சமந்தா அளித்திருந்தால், திட்டமிட்டபடி இன்று டீஸர் வெளியாகியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அஞ்சான் படத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்த விஜய் படக்குழுவினர் செய்யும் சதியே காரணம் எனவும் அஞ்சான் படக்குழுவினர் கூறிவருகின்றனர். இந்த சதிக்கு சமந்தாவும் உடந்தையா? என்பது குறித்து அஞ்சான் படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply