இரட்டை இலை சின்னத்திற்காக கட்சி பெயரை மாற்றிய ஜெ.தீபா
இரட்டை இலை சின்னத்திற்காக அதிமுக அம்மா அணியும், அதிமுக ஓபிஎஸ் அணியும் தேர்தல் ஆணையத்தில் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் நிலையில் தீபாவும் தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருகிறார். அதற்கு வசதியாக தனது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையும் பெயரையும் அவர் மாற்றியுள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எதையோ செய்துகொண்டிருக்கும் ஜெ.தீபா பெரும் விமர்சனங்களுக்குள்ளாகி வரும் நிலையில் தற்போது தனது கட்சி பெயரையும் மாற்றுகிறார். உலக அரசியல் வரலாற்றில் புதுமையாக கட்சியின் பெயரை மாற்றிய தீபா, தனது கட்சிக்கு அதிமுக ஜெ.தீபா அணி’ என்ற புதிய பெயரை வைத்துள்ளார்.
அதிமுகவு கட்சிக்கு உரிமை கோரவும், போயஸ் கார்டனுக்கு உரிமை கோரவும் தனக்குதான் உரிமை இருக்கிறது என்று பேசி வரும் தீபா, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை வரை அவகாசம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். சட்டமன்ற உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் கையில் வைத்திருக்கலாம். தொண்டர்கள்தான் பலம். அந்தப் பலம் தங்களிடம்தான் இருக்கிறது என்றும் கூறி வரும் தீபா இன்னும் என்னென்ன கூத்து நடத்த காத்திருக்கின்றாரோ என அதிமுக தொண்டர்கள் கவலை கொண்டுள்ளனர்,.
Leave a Reply
You must be logged in to post a comment.