கணவரை வீட்டை விட்டு விரட்டினார் தீபா:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தீபா தொடங்கினார். ஆனால் அவரது கணவர் தனியாக அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக கூறினார். எனவே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அமைப்பின் அலுவலகத்தில் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினர்களும் கையில் கிடைத்ததை கொண்டு தாக்கிக் கொண்டதாகவும், இந்த சம்பவம் பற்றி கேள்விபட்ட போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதம் சம்பவம் காரணமாக தீபா, கணவர் மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றி , அவரை மீண்டும் வீட்டுக்குள் விட வேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.