என்னை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். தீபா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். தற்போது அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர் – அம்மா, தீபா பேரவை தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேசிய தீபா கூறியதாவது: எனக்கு திமுக தான் எதிரி. தினகரன் மற்றும் மதுசூதனன் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். என்னை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்.
பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். மக்களின் பிரச்சனைகள் குறித்து சிந்திப்பதில்லை. ஜெயலலிதா மரணத்தில் பன்னீர்செல்வம் நாடகம் ஆடுகிறார். அவரது நாடகத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில்
தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்குமோ, அதுவே தேர்தல் முடிவாக இருக்கும்’ இவ்வாறு தீபா பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.