shadow

ஆர்.கே. நகரில் தீபா-தினகரன் நேரடி மோதலா?

deepa, dinakaran, RK Nagar, jayalalitha, by electionமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதல் ஆளாக இந்த தேர்தலில் போட்டியிட போவதாக தீபா அறிவித்துள்ளார். இதனை அடுத்து சசிகலா அதிமுக சார்ப்பில் தினகரன் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் டிடிவி தினகரன் முதல்வர் ஆவார் என்று கூறப்படுவதால் இந்த தொகுதி மீண்டும் முதல்வர் வேட்பாளர் தொகுதியாக மாறும் நிலை உள்ளது.

மேலும் மார்ச் 13 முதல் திமுகவும் நேர்காணல் நடத்தி விரைவில் வேட்பாளரை அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தினகரன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திருமாவளவன் அனைத்து கட்சியின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

மொத்தத்தில் ஆர்.கே.நகர் பண மழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது என்பதும் அந்த தொகுதியின் ஒவ்வொரு வேட்பாளரும் விஐபி ஆகிவிட்டனர் என்பதும் தெரிய வருகிறது.

Leave a Reply