டிசம்பர் 4: சென்னையில் இன்று அதிகாலை திடீர் மழை: விடுமுறை அளிக்கப்படுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. நேற்று கூட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் திடீர் மழை பெய்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணாசாலை, தி. நகர், பாண்டிபஜார் , சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி அளவில் திடீரென மிதமான மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது

இந்த நிலையில் இன்று சென்னை உள்பட ஒருசில பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே உள்ளது. இது குறித்து ஆட்சித் தலைவர் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply