shadow

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி மீண்டும் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களிலும், டிசம்பர் 5ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.