குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டுத்தீப்பிடித்ததால் ஏற்பட்ட விபத்தில் டிரக்கிங் சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். இதில் 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி என்பவர் இன்று காலையிலும் அதனை தொடர்ந்து சில மணி நேரங்களில் சென்னையைச் சேர்ந்த நிவ்யா பிரக்ருதி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
இதன் மூலம், காட்டுத்தீ விபத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.