2ஜி வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோர் டெல்லியில் வரும் 26ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள நிலையில் இருவரும் அடுத்தடுத்து உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் மருத்துவமனை வட்டாரங்கள், இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதை தெரிவிக்கவில்லை.
2ஜி வழக்கின் விசாரணைக்காக கனிமொழி, தயாளுஅம்மாள் மற்றும் சரத்குமார் ஆகியோர் வரும் 26 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.