நாளை ‘மகள்கள் தினம்’. அமைச்சர் மேனகா காந்தியின் முக்கிய வேண்டுகோள்
தந்தையர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம் போல நாளை மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மகள்கள் தினத்தை ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மகள்கள் தினத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது மகள், மற்றும் பேத்தியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் அனைவரும் தங்கள் மருமகள், மற்றும் பேத்தியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ‘மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக இன்று வெளியான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “மகள்கள் தினம் கொண்டாட்டத்தின் மூலம் தங்கள் வாழ்வில் உள்ள பெண் பிள்ளைகளை மரியாதை செய்யும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. மகள்கள் தினத்தையொட்டி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பெண் பிள்ளைகளின் பெருமையை பரப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.