கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருவளையங்கள் அழகையே கெடுத்து விடும். மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதனை ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் போக்கிவிட முடியும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் அகலும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை
தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவ வேண்டும்.

பாதாம் மற்றும் பால்
4-5 பாதாம் பருப்புகளை எடுத்துக் கொண்டு, அதனை பால் சேர்த்து அரைத்து விழுது தயார் செய்து, பின்பு அந்த பேஸ்டை கருவளையம் உள்ள பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிடவும். இது கண்களை சுற்றியுள்ள சருமத்தின் கருமை நிறத்தினைக் குறைக்கும்.

மஞ்சள் தூள்
சிறிது மஞ்சள் தூளை எடுத்து, அதில் அன்னாசி பழச்சாற்றில் கலந்து கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தொடர்ந்து தடவுவதால், அது கருமை நிறத்தினைக் குறைக்கின்றது.

வைட்டமின் ஈ க்ரீம்
ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன்பு கண்களைச் சுற்றி வைட்டமின் ஈ மற்றும் சி கொண்ட க்ரீமைத் தடவி தூங்கினால், கருவளையங்களில் இருந்து விடுபடலாம்.

புதினா
கொஞ்சம் புதினா இலைகளைக் கசக்கி, கண்களை சுற்றியுள்ள கருவளையங்களின் மீது தடவவும். இது போன்று செய்வதால், சோர்வாக இருக்கும் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியை தந்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

தக்காளி ஜூஸ்
ஒரு டம்ளர் தக்காளி ஜூஸில், சிறிது புதினா இலைகள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும். இது போன்று ஒரு நாளைக்கு இருமுறை குடிப்பதுவும் இன்னொரு மருந்தாகும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகளை வட்டமாக வெட்டி, அதனை கண்களுக்கு 10-15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண்களில் உள்ள கருவளையங்கள் நீங்குவதோடு, கண்களையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Leave a Reply