உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக 5 தலித் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமே நாடு முழுவதையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ கான்பூர் என்ற மாவட்டத்தில் ஹரேவா என்ற பழமையான கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் உள்பட உறவினர்கள் சேர்ந்து ஓடிப்போன தலித் இளைஞரின் உறவினர்களான 5 தலித் பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கம்பால் அடித்து உதைத்தனர். இந்த ஊர்வலம் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் நடந்ததாகவும், இதை உள்ளூர் போலீஸார் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி பெண்ணின் தந்தை உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.