தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டின் “ஜான் ஹாப்கின்ஸ்’ மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் ரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துவதால், தேநீர் அருந்தாதவர்களைவிட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.