விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு: விரைவில் கைது நடவடிக்கை
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது டுவிட்டரில் விஜய் நடித்த ‘சுறா’ படம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது. எனவே தன்யா மீது ஆபாசமான சொல் தாக்குதல் டுவிட்டரில் நடத்தப்பட்டது. கிட்டத்ட்ட 65000 டுவிட்டுகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்தது
இந்த நிலையில் இதுகுறித்து தன்யா ராஜேந்திரன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவின் அடிப்படையில்சென்னை சிட்டி சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
செக்சன் 354D, 506(i), 507, 509, of IPC & 67 பிரிவுகளிலும், பெண் மீதான வன்கொடுமை பிரிவிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடையாள தெரியாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து மிக விரைவில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.