போராட்டத்தின் மத்தியில் போராடி வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி போராடி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது. இதனால் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி வாட்சன், ராயுடு, பில்லிங், மற்றும் ஜடேஜா அதிரடியால் 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது
23 பந்துகளில் 56 ரன்கள் அதிரடியாக அடித்த பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.