ஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சிஎஸ்கே
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற்ற பிளே ஆப் போட்டியில் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. தோல்வி அடைந்த ஐதராபாத் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
இன்றைய பிளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, ஐதராபாத் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
140 என்ற எளிய இலக்கை அடைந்தால் இறுதி போட்டிக்கு தகுதி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணீ 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்த டூபிளஸ்சிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.