shadow

கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணிக்கு கோலாகல வரவேற்பு

11வது ஐபிஎல் கோப்பையை வென்ற செனனி சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். இதனை அடுத்து, பேருந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply