shadow

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: டுவிட்டரில் கலக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகள் தடை இன்றுடன் முடிவடைந்துவிட்டது. இதனை சிஎஸ்கே ரசிகர்க டுவிட்டரில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஆதிக்கம் செய்து அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூதாட்ட புகார் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 14 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் அந்த தடை முடிகிறது என்பதால் வரும் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் விளையாட சிஎஸ்கே தகுதி பெற்றுள்ளது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply