shadow

rajiv gandhi memorial

கடந்த 1991ஆம் ஆண்டு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவிடம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறாது. இந்த பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர், நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களையும் காவல்துறையினர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் யாதவ் என்பவர் திடீரென தான் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட யாதவ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிஆர்பிஎஸ் வீரர் யாதவ் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply