shadow

புத்தாண்டு தினத்தில் கோவில்கள் திறக்கப்படுமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் இந்து கோவில்களில் புத்தாண்டு தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நள்ளிரவில் கோவிலை திறந்து வைப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்ற கருத்து ஒருசிலரிடையே ஏற்பட்டது.

இந்த நிலையில் புத்தாண்டு நள்ளிரவில் இந்து கோயில்களை திறக்க தடை விதிக்க என்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் இந்து கோயில்களை திறக்க தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இந்த மனு தொடர்பாக ஜனவரி 8ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்

Leave a Reply