ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாததால் அரசு வழக்கறிஞருக்கு நேற்று ரூ.65000 அபராதம் விதித்த நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை. அவர் கொடுத்த மருத்துவ சான்றிதழை நிராகரித்த நீதிபதி, இன்றும் அவருக்கு இரண்டாவது நாளாகரூ.65000 அபராதம் விதித்தார்.
மேலும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் இறுதி வாதத்தை இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்க உத்தரவிடுவதாகவும், அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் பவானி சிங் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இரண்டாவது நாளாக அரசு வழக்கறிஞர் ஆஜராகாமல் இருப்பது பெரிதும் வருத்தமளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.