shadow

coupleதிருமணமாகி 42 வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்திய தம்பதியினர் இருவரும் ஒரே நேரத்தில் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நியூயார்க் நகரில் நடந்துள்ளது.

Earl மற்றும் Mary Myatt என்ற பெயர்களையுடைய தம்பதிகள் இருவருக்கும் 59 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 42 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு 30 வயதில் Brad Myatt என்ற மகன் உள்ளார்.

இந்த தம்பதியரில் Earl அவர்களுக்கு மூளையில் கடந்த மாதம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை குணப்படுத்த அதிக செலவாகும் என்று மருத்துவர்களால் கூறப்பட்டது. மேலும் கூடியவிரைவில் அந்த நோய்க்கு சிகிச்சை பெறாவிட்டால் அவர் உயிருக்கே ஆபத்து என்றும் கூறப்பட்டது. இதனால் மனமுடைந்த இந்த தம்பதியினர் கடந்த ஞாயிறு அன்று ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு நிமிடம் முன்பு தங்கள் மகனை செல்போனில் அழைத்து அவருக்கு குட் பை சொல்லிவிட்டு மரணம் அடைந்துள்ளனர். இந்தசம்பவம் நியூயார்க் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply