மனிதநேயம் இல்லாததால்தான் கொரோனா வைரஸ் குறைந்ததா? சீனாவில் பரபரப்பு

மனிதநேயம் இன்றி நடவடிக்கை எடுத்த காரணத்தினால்தான் சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஈவு இரக்கமின்றி கைது செய்யப்பட்டார்கள் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின்றன

கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டுபிடிக்க உளவுத்துறை மற்றும் ராணுவமும் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

மனிதநேயத்தை கொஞ்சமும் பார்க்காமல் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தியதால் தான் தற்போது வைரஸ் பரவாமல் இருப்பதாகவும் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் தற்போது வெகுவாக குறைந்து உள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இதே நிலைமை இந்தியா உள்பட ஜனநாயக நாட்டில் இருந்தால் சீனா எடுத்த இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply