இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2069ஆக உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் 156 பேருக்கு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

அதேபோல் உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது என்றும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர் என்றும் ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

Leave a Reply