சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உதவ நிபந்தனையுடன் அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விநியோகிக்கும் முன்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது
மேலும் 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போதிய முன்னெச்சரிக்கையுடன் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்ய தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது என்பதும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் கட்டுப்பாடு என தமிழக அரசு விளக்கம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.