பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய 43 வயது நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
இதனை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் திடீரென இன்று காலை அந்த நோயாளி தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நோயாளியைத் தேடி வருகின்றனர்
அவருடைய வீடு சின்மயா நகரில் இருப்பதால் அந்த பகுதியில் தேடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவர் தப்பி ஓடி விட்டதால் அவரால் இன்னும் எத்தனை பேர்களுக்கு கொரோனா நோய் பரவுமோ? என்ற அச்சம் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.