கொரொனாவுக்கு பலியான மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் தாயார்!
மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது
71 வயதான இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியையும் சேர்த்தால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.