இரட்டைக் கோபுர தாக்குதலை விட பயங்கர அழிவு ஏற்படும்: அமெரிக்கா அதிர்ச்சி

அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவம் என்றால் அது இரட்டை கோபுர தாக்குதல் தான். பின்லேடனின் தீவிரவாத அமைப்பு ஒன்று விமானங்களை இரட்டை கோபுரத்தில் மோதவிட்டு தாக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய அழிவு கொரோனாவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர் என்பதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அதிக பாதிப்பு வரும் இரண்டு வாரங்களில் ஏற்படும் என அதிபர் கூறி உள்ளதால் அமெரிக்கா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply