எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவி: மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க ஒரு சில அறிகுறிகள் இருப்பதால் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய கண்டறியப்படுவது எளிதாக இருந்தது

ஆனால் தற்போது கேரளாவில் உள்ள ஒரு மாணவிக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனா தாக்கியுள்ளது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவில் உள்ள மாணவி ஒருவர் சமீபத்தில் வெளி மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு திரும்பி வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாததால் மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தனர்

இந்த நிலையில் திடீரென அவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது தெரிந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்லது. இது எப்படி சாத்தியம் என்பது புரியாமல் மருத்துவர்கள் குழப்பமாகி வருகின்றனர். இது கொரோனாவின் மற்றொரு கொடூரம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply